ஸ்டாலின் தவறான பதிவு; 'டுவிட்டரில்' நீக்கம்

சென்னை: 'கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்' என்ற தவறான தகவலை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்ட, ஒரு மணி நேரத்தில் நீக்கினார்.

'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று ஸ்டாலின் கூறியிருந்ததாவது: தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.